Earn Money 9000 upto.. click it...

Saturday 24 November 2012

Ajith starts Siruthai Siva’s Project from December

Ajith’s upcoming movie with Vishnuvardhan is 60 percent complete according to sources and the next schedule of the movie shooting gonna take place in Chennai from November 28th, 2012

Ajith has also planned to start shooting for his next movie with director Siva in Hyderabad from December 10th, 2012.

This means he would be working simultaneously on the Vishnuvardhan and Siva projects from December.

Monday 30 July 2012

அஜீத்தோடு ராணா!

  • தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வரும் ராணா, சில தமிழ் படங்களில் நடிக்க முன்வந்தும்,  இறுதி கட்டத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது.
  • இதனால் தெலுங்கில் 'வேதம்' ( தமிழில் 'வானம்') படத்தின் இயக்குனர் க்ரிஷ் இயக்கி வரும் அடுத்த படத்தில் ராணா மற்றும் நயன்தாரா நடித்து வருகிறார்கள். இப்படம் தனது நேரடி தமிழ் படமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, ஒரே சமயத்தில் தமிழிலும் இப்படத்தினை இயக்கி வருகிறார் க்ரிஷ். தமிழில் இப்படத்திற்கு பெயர் 'ஓங்காரம்'.
  • வெற்றிமாறன் - சிம்பு இணையும் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ராணாவிடம் பேசி வந்தார்கள். இறுதியில் அப்படத்தில் இருந்து விலகினார் ராணா. வெற்றிமாறன் - சிம்பு படம் எப்போது தொடங்கும் என்பது அவர்களுக்கே தெரிந்த உண்மை.
  • இந்நிலையில் அஜீத் - விஷ்ணுவர்தன் இணையும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ராணா. இதற்கான அஜீத் - ராணா படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற இருக்கிறது.
  • இப்படத்தில் ராணா சம்பந்தப்பட்ட காட்சிகளை 3 முதல் 4 நாட்களில் முடிக்க இருக்கிறார்கள்.
  • அஜீத், நயன், ஆர்யா, டாப்ஸி, அதுல் குல்கர்னி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தில், ராணாவும் புது நட்சத்திரமாக இணைந்து இருக்கிறார்.

Friday 13 July 2012

Double House Full For Billa 2

Ajith, the king of first day first show, is back with a bang. His latest, Billa 2, has recorded the biggest ever opening of Kollywood and fans are demanding many more special shows so they don’t have to wait too long to catch the film.
With several special shows and 50 shows at Mayajaal alone, Billa 2 is the big flick this weekend.
CEO of Mayajaal, Udeep, said, “There is a huge demand to increase the number of shows for Billa 2 for the weekend.
There is a show every 15 minutes in our theatres on the opening day. It will be shown on 12 screens at Mayajaal. There will be 60 shows on the weekend.
The tickets, even for weekdays, are almost sold out.” Abirami Ramanathan said the film is running in three screens at their
theatre. “All shows were houseful within an hour of opening the bookings.
We have special shows on Saturday and Sunday. All of Ajith’s films have had fantastic openings,” he said.
It is the same story wherever the film is running. Preetha R., PR and marketing manager of Satyam Cinemas, said, “Tickets are actually in demand for the weekend despite special morning shows. The weekend is are totally booked. It’s a double house full opening for Billa 2.” Producer Sunir has also ensured that distributors make a good profit from this opening. He said, “The film was sold for a record price. We have made the deals in such a way that all distributors will make money in all territories across the state. As distributors are the marketing lifeline of a film, we have chosen efficient distributors for Billa 2.”

Published in Deccan Chronicle daily English newspaper dated July 13, 2012.

Wednesday 27 June 2012

பில்லா 2 ஜுலை 13ம் தேதி முதல்...!

 
தமிழ் திரையுலகில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 'பில்லா 2' படம் ஜுலை 13ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

அஜீத், பார்வதி ஒமணக்குட்டன், ப்ரூனா அப்துல்லா நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா 2' படத்தினை சக்ரி டோல்டி இயக்கி இருக்கிறார்.

'பில்லா 2' படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் " பில்லா 2 படம் உலகம் முழுவதும் சுமார் 1200 திரையரங்குகளில் ஜுலை 13ம் தேதி வெளியாகிறது.

ஜுலை முதல் வாரத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம். அதில் 'பில்லா 2' படத்தின் first lookஐ வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். ஜுலை 1 அல்லது 2ம் தேதி இந்த விழா இருக்கும்.

அதற்கு பிறகு படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கும். 'பில்லா 2' ஒரே சமயத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் வெளிநாடுகளில் வெளியாகிறது.

ஆந்திராவில் ' டேவிட் பில்லா - the beginning ' என்ற பெயரில் வெளியாகிறது. மலேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 'பில்லா 2' படம் அந்தந்த நாட்டு சப் -டைட்டிலுடன் வெளியாகிறது." என்று தெரிவித்து இருக்கிறார்.

Friday 15 June 2012

பில்லா-2 க்கு “எ ” சான்றிதல்

விஷணுவர்தன் இயக்கத்தில் அஜித்குமார், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘பில்லா’ படம் சூப்பர் ஹிட்டானது.
இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.
இளமை ததும்பும் அஜித்தை இப்படத்தில் பார்க்கலாம்.
இது அஜித் குமாரின் 51-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. பார்வதி ஓமனகுட்டன், பூஜா குமார் ஆகியோர் கதாநாயகிகளாக இப்படத்தில் நடித்துள்ளனர்.
யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இன்று சென்சார் போர்டுக்கு சென்ற ‘பில்லா 2′ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வன்முறை காட்சிகள் இருப்பதால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கபட்டதாம்.
இதனையடுத்து இம்மாதம் 21-ம் தேதி இப்படத்தை திரையிட இருக்கிறார்களாம்.
பில்லா 2 A (adult) சர்டிபிகட் இவரும் காரணம். வீடியோ இணைப்பு……
 

Thursday 7 June 2012

விஜய்க்கு அஜீத்தின் அதிரடிப் பிறந்தநாள்



  • ஷக்ரி டோலட்டி இயக்கத்தில் தல அஜீத் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் பில்லா2. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதை விட இன்னும் ஓர் எதிர்பார்ப்பையும் இன்ப அதிர்ச்சியையும் அளிக்க இருக்கிறது பில்லா 2.

    இத்திரைப்படம் ஜூன்22 உலகம் எங்கும் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டுத் தேதியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    அஜீத், பார்வதி ஓமனக்குட்டன் ஜோடியாக நடித்துள்ள படம் பில்லா 2. பில்லா படத்தின் முதல் பகுதி கதை இது.

    சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன் என்டர்டெயின்மெட் தயாரித்துள்ளது.

    பில்லா 2 ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இப்போது தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து அறிவித்துள்ளது.

    வரும் ஜூன் 22-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அறிவித்துள்ளார்.

    ஜூன் 22- அஜீத்தின் திரையுலக போட்டியாளரான விஜய்யின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது!!

Friday 18 May 2012

விஜயுடன் இணைந்து நடிக்க அஜித் ரெடி!!

  • ரஜினியும் கமலும் எப்போது மீண்டும் இணைந்து நடிப்பார்கள்? , அஜித்தும் விஜய்யும் எப்போது இணைந்து நடிப்பர்கள்? என்பது இதுவரையிலும் கேள்விக்குறியை தாங்கியபடியே நிற்கின்றன.
  • ரஜினியும் கமலும் இணைந்து அபூர்வ ராகங்கள், அலிபாபாவும் அற்புதவிளக்கும், நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது உட்பட பல படங்களில் நடித்துள்ளனர். அதேபோல் அஜித்தும் விஜய்யும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
  • ஆனால் அந்த படம் வெற்றிபெறவில்லை. இப்போதைய தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக அஜித், விஜய் இருப்பதால் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனாலும் அஜித், விஜய் இருவரும் ரஜினி, கமல் சொல்வது போல் கதை எனக்கும், அவருக்கும் பிடித்து நேரமும் கூடிவந்தால் கண்டிப்பாக நடக்கும் என்று கூறுகின்றனர்.
    கோடம்பாக்கத்தின் தற்போதைய ஹாட்
  • டாப்பிக்கை கையில் எடுத்திருப்பவர், அஜித்தை வைத்து அமராவதி படம் எடுத்த இயக்குனர் செல்வா தான். ரஜினி, கமல் நடித்திருந்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் செல்வா.
  • தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தி முதல் படத்தையே வெற்றியடையச் செய்த இயக்குனர் என்கிற முறையில் அவர் ரீமேக் செய்யும் இந்த படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டுள்ளாராம். நினைத்தாலே இனிக்கும் படத்தில் கமல் நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிக்க அஜித் முன்வந்திருப்பதாக தெரிகிறது.
  • தமிழ் சினிமா ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் இயக்குனர் செயல்பட்டால் அடுத்ததாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடக்கும் என்பது கோடம்பாக்கத்து தகவல்.

Friday 4 May 2012

அஜித்துக்கு ஆதரவு!

  • ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘துப்பாக்கி’ திரைப்படத்தை ‘வீ கிரியே­ன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
    துப்பாக்கி படத்தின் விளம்பர போஸ்டர்கள் 1.5.2012 அன்று விளம்பரப்படுத்தப்பட்டன. இத்திரைப்படம் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தால் விநியோகம்
    செய்யப்படவுள்ளது.
  • ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளது இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், மத்திய திரைப்பட தணிக்கைக்குழு என திரைப்படம் தொடர்பான அனைத்து அமைப்புகளுக்கும் 29.11.2011 அன்று தமிழ்நாடு அரசின் பொதுச் சுகாதாரத்துறை எழுதிய கடிதத்தில்
  • திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.26-03-2012 அன்று கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணையை
    செயல்படுத்த உத்தரவிடப் பட்டுள்ளது.
  • இந்நிலையில் பசுமைத்தாயகத்தின் மாநில தலைவர் சௌமியா அன்புமணி கொடுத்துள்ள புகாரில் “ இவ்வாறாக, நடுவண் அரசு, தமிழ்நாடு அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத் துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை
  • கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படிக் குறறம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது
  • அதிர்ச்சி அளிக்கிறது. எனவே ‘துப்பாக்கி’ திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குநரும், நடிகரும் இத்திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறாமல் தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய அரசு புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை முழுமையாக பின்பற்ற வேண்டும்
  • என்றும் பசுமைத் தாயகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். அஜித் நடித்த அசல் படத்திலும் இதேபோல் புகையிலை பயன்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அஜித் படத்திற்கு வராத பிரச்சனை விஜய் நடித்துள்ள படத்திற்கு வந்துள்ளது.

சென்னை பாபா கோயிலில் தரிசனம் பெற்றார்

 Ajith prayer from baba temple ,ajith stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com
  • சென்னை வளசரவாக்கம் காமகோடி நகரில் ஸ்ரீவிஸ்வரூப ஷீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டு உள்ளது. சினிமா தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் இந்த கோவிலை கட்டி உள்ளார். ஆகம விதிகளின்படி இக்கோவில் அமைக்கப்பட்டு உள்ளது.
  • 9 அடி உயர விஸ்வரூப பாபா படமும் அனுகுயாவின் கதையை பறைசாற்றும் தத்தோத்திரா படமும் கோவிலில் உள்ளது.
    இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது.
  • ஷீரடியில் இருந்து வந்திருந்த சிறப்பு அர்ச்சகர்கள் அங்கிருந்து கொண்டு வந்த விசேஷ நீரினால் சிறப்பு பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தினர். இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • இயக்குனர்கள் விஷ்ணு வர்த்தன், மனோஜ் குமார், தயாரிப்பாளர்கள் சஞ்சய் வாத்வா, டி.என்.எஸ்., கதாசிரியர் சுபா, சுரேஷ் சந்திரா ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tuesday 1 May 2012

அஜித் வேண்டுகோள்!!

  • நடிகர் அஜித் நேற்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் அளித்த பேட்டி வருமாறு:-
  • எனது 20 வருட சினிமா வாழ்க்கையில் நிறைய நல்ல படங்களில் நடித்துள்ளேன். மோசமான படங்களிலும் நடித்துள்ளேன். நல்ல முடிவுகள் எடுத்தது உண்டு. மோசமான முடிவுகளையும் எடுத்தேன். அற்புதமான மனிதர்களையும் சந்தித்து இருக்கிறேன். இதன் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இவை என்னை செதுக்கி உள்ளது.
  • கடந்த கால நிகழ்வுகள் பற்றி எந்த வருத்தமும் கிடையாது. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்பதை நான் நம்புகிறேன். எனக்கு பெரிய லட்சியங்கள் கிடையாது. வாழ்க்கை என்பது பெரிய பரிசு.
  • ஆக்கப்பூர்வமாக வாழ ஆசைப்படுகிறேன். நான் யாருக்கும் போட்டியும் இல்லை. நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் உள்ளது என்பதை நான் நம்புகிறேன்.
  • எனவே நமக்கு கிடைப்பது கிடைக்கும். ஏன் கவலைப்பட வேண்டும். படத்தின் வெற்றிக்கான பார்முலா தெரிந்தால் எல்லோருமே 100 சதவீத ஹிட் கொடுக்க முடியும். ஒரு படம் ஜெயிப்பதற்கு பல விஷயங்கள் உள்ளது. அது கூட்டு முயற்சி. படங்களை தேர்வு செய்ய இயக்குனர், தயாரிப்பாளர்களுடனான புரிதல் முக்கியம். கதையும் முக்கியமானது. படத்தை முடிவு செய்த பின் எதிலும் நான் தலையிடமாட்டேன். நான் உணர்வு பூர்வமாக பேசுகிறேன். நினைப்பது ஒன்று பேசுவது ஒன்று கிடையாது. அரசியல் ரீதியாக இது சரி இல்லாமல் இருக்கலாம். அது என் குற்றம் இல்லை.
  • அஜித்துக்கும் எனக்கும் தொழில் முறை போட்டிதான் உள்ளது என்றும், சினிமாவுக்கு வெளியே நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றும் விஜய் சொல்லி இருப்பது உண்மைதான்.
  • விஜய் மனைவி சங்கீதாவும் என் மனைவி ஷாலினியும் நட்புடன் பழகுகிறார்கள். இருவர் குழந்தைகளும் ஒன்றாக இருக்கின்றனர். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ரசிகர்கள் ஒருத்தரை ஒருத்தர் பற்றி தவறாக கருத்துக்கள் வெளியிடுவது மனதை புண்படுத்துகிறது. சாதாரண மனிதன் இதை பார்க்கும்போது முகம் சுளிக்கிறான். எனவே இவற்றை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
  • மனைவி ஷாலினி எல்லா விஷயங்களிலும் எனக்கு உதவியாக இருக்கிறார். சினிமா சம்பந்தமாக நான் எடுக்கும் முடிவுகளில் தலையிடுவது இல்லை. நான் நன்றாக சமைப்பேன். எனது அம்மா சிறு வயதில் இருந்தே சமையல் கற்று கொடுத்து உள்ளார்.
  • இவ்வாறு அஜீத் கூறினார்.

Saturday 14 April 2012

சினிமாவில் தான் அஜித்துக்கும் எனக்கும் போட்டி...! விஜய் பேட்டி!!


  • சினிமாவில் தான் அஜித்தும், நானும் நீயா-நானா...? என்று போட்டி போடுவோம் மற்றபடி நாங்கள், நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். பல்வேறு தடைகளை கடந்து இன்று, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து இருக்கும் நடிகர் விஜய், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, பொதுவாக எல்லா ஹீரோக்களும் ரொமான்ட்டிக்கில் இருந்து அதிரடிக்கு மாறுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் அப்படியே மாறியிருக்கிறது. எனது சினிமா கேரியரில் இடைப்பட்ட காலத்தில் தான் ரொமான்ட்டிக் ரோலில் நடித்து, இப்போது ஆக்ஷ்ன் ஹீரோவாக மாறியிருக்கிறேன். எனக்கு காமெடி கலந்த ரொமான்ஸ் காட்சியில் தான் நடிக்க ஆசை, ஆனால் இன்றைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து கமர்ஷியலில் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.

    மேலும் சினிமாவில் தனக்கு யார் போட்டி என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜய், ரஜினி-கமல் ஆகியோரைத் தொடர்ந்து எனக்கும், அஜித்துக்கும் போட்டி என்று பலரும் கூறுகிறார்கள். சினிமாவை பொறுத்த வரைக்கும் அஜித்துக்கும், எனக்கும் நீயா - நானா...? என்று போட்டி நடக்கும், மற்றபடி நானும் அஜித்தும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்வோம். நான் அவருடைய வீட்டிற்கும், அவர் என்னுடைய வீட்டிற்கும் வருவது உண்டு. எங்களைப் போலவே எங்கள் இருவரது குழந்தைகளும் நல்ல நண்பர்களாய் இருக்கிறார்கள். சினிமாவில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லது தானே.

Thursday 12 April 2012

முதல் எபிக் கேமராப் படம் அஜித்தின் பில்லா -2



  • அஜித் நடித்து வரும் ‘பில்லா 2′ படத்தில் எபிக் என்ற புதுவகை கேமராவை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால் ஆசியாவிலேயே இந்த கேமராவை பயன்படுத்திய முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘பில்லா 2′ படம் பெற்றிருக்கிறது.
  • அஜித்தின் ‘பில்லா’ படம் பெற்ற வெற்றியை தொடர்ந்து ‘பில்லா 2′-வை மிக பிரமாண்டமாக எடுத்து வருகிறார்கள். இதில் சாதாரண மனிதனான ஒருவர் எப்படி பில்லாவானான் என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
  • ‘பில்லா 2′ முழுக்க முழுக்க அஜித்தை மையமாக வைத்து பின்னப்பட்டிருப்பதால் அஜித்தின் தோற்றமும் நடிப்பும் பேசும்படி இருக்கும்.
  • இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்குகிறார். இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தை இயக்கியிருக்கிறார். அமெரிக்காவில் திரைப்பட தொழில்நுட்பம் படித்துப் பட்டம் பெற்றவர்.
  • ஹீரோயின்களாக பார்வதி ஒமணக்குட்டனும், பிரேசில் நாட்டு மாடலான ப்ரூனா அப்துல்லாவும் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் ஆசியாவிலேயே இதுவரை எந்த திரைப்படத்திற்கும் பயன்படுத்தாத எபிக் (Epic) கேமராவை பயன்படுத்தி முழுப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள்.
  • அதீநவீன தொழில்நுட்பத்தின் அடையாளமாக திகழும் எபிக் கேமராவின் மூலம் முழுக்க முழுக்க டிஜிட்டல் படமாக உருவாகியிருக்கிறது 

Thursday 5 April 2012

“அஜித்தின்” அடுத்தப் படம்

  • யுவன் சங்கர் ராஜா அடுத்து சொந்தப் படம் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் நாயகன் அஜீத்.
  • சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் ஒயிட் எலிபேன்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர்.
    பின்னர் அவர்களின் நட்பில் விரிசல் விழ, அந்த நிறுவனம் சார்பாக ஒரு படம் கூட தயாரிக்காமல் பெயரளவிலேயே இருந்தது. இதனிடையே மங்காத்தா வெற்றிக்கு பிறகு அஜீத் குமாருடன் மீண்டும் இணைய போவதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்தார்.
  • ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை அவர் ரகசியமாக வைத்திருந்தார்.
    இப்போது அந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது யுவன் சங்கர் ராஜாதான் என்று தெரிய வந்துள்ளது.
  • அஜீத் குமார், வெங்கட் பிரபு மீண்டும் இணைய போகும் படத்தை ஒய்ட் எலிபேன்ட் பேனரில் தயாரிப்பார்களா என்பது விரைவில் முடிவாகிவிடும்.
    இந்த படத்துக்கு இசையமைப்பவர் யுவன்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா!

Friday 23 March 2012

அஜித் படம் வெளி வருவதில் புதிய சிக்கல்

  • எப்பவுமே மே 1 ந் தேதியான தனது பிறந்த நாளில் தன்னோட படங்களை ரிலீஸ்செய்வதில் ஆர்வம் காட்டும் அஜீத்துக்கு, இந்த முறை அந்த ஆசை கை கூடாது போலிருக்கிறது. வேக வேகமாக பில்லா-2ஐ உருவாக்கிக் கொண்டிருந்தாலும் மே இறுதியில்தான் படத்தை வெளியிட முடியுமாம்.
  • ரிலீஸ் எப்ப வேணா ஆகட்டும். படத்தை இப்ப கொடுத்திருங்க என்று கால்கடுக்க காத்திருக்கும் ஹோல்சேல் விநியோகஸ்தர்களில் அதிகமுக்கியமானவராக கருதப்படுகிறார் பாரிவேந்தர். சினிமாவுக்குள் ‘புதிய தலைமுறை’யாக அடியெடுத்து வைத்திருக்கும் இவரை குபேர மூலையாக நினைத்து கும்பிட ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
  • அப்படிப்பட்டவருக்கு பில்லாவை கொடுக்க சம்மதித்த தயாரிப்பு தரப்பு பெரும் விலை சொல்கிறதாம். அதற்கும் தயாராகிவிட்டார் வேந்தர். ஆனால் ஒரு சிக்கல். படத்தின் கான்சப்ட் மற்றும் சண்டை காட்சிகளை கருத்தில் கொண்டால் நிச்சயம் ஏ தான் கிடைக்குமாம். ஏ சர்டிபிகேட் படங்களுக்கு 30 சதவீத வரியை தனியாக செலுத்த வேண்டும். இந்த வரிக்காகவாவது விலையை குறைச்சுக்க கூடாதா என்கிறார்களாம் வேந்தர் தரப்பில்.

குழப்பத்தில் அஜித்?

  • ஹிந்திப்படம், சைப் அலிகான் நடித்து பெரும் வெற்றிபெற்ற த்ரில்லர் படம். இப்படத்தைத் தமிழில் எடுக்க உள்ளனர். இதில் அஜித்தை வைத்து இயக்க மூன்று இயக்குநர்களிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
  • அஜித் தற்போது நடித்துவரும் “பில்லா-2′ படம் முடிவடையும் நிலையில் உள்ளது. அடுத்து “சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதையடுத்து விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க உள்ளார். இதனால் “ரேஸ்’ படத்தை விஷ்ணுவர்தனிடம் தரலாமே என யோசனை சொன்னராம் “சிறுத்தை’ சிவா.
  • ஆனால் “மங்காத்தா’ இயக்குநர் வெங்கட் பிரபுவை சொன்னாராம் அஜித். படத்தைத் தயாரிக்கும் மும்பை நிறுவனமோ பிரபுதேவா இயக்கினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறதாம். இயக்குநர் ரேஸில் முந்தப்போவது யாரோ?

Friday 2 March 2012

அஜீத் படத்தில் நயன்தாரா போட்ட நிபந்தனை

  • நயன்தாராவின் இந்த திடீர் பாலிஸியால் நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தின் துணைக்கோள்கள் அத்தனையும்.
  • வருகிற ஏப்ரல் மாதம் முழுக்க சென்னையிலிருக்கும் பிரபல ஓட்டல் ஒன்றில் ரூம் போட்டிருக்கிறாராம் நயன்தாரா. இங்கிருந்து கொண்டுதான் எல்லாவற்றையும் ஆபரேட் செய்யப் போகிறார் அவர். அஜீத் நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா கமிட் ஆகிவிட்டார் என்ற தகவலிலும் உண்மையில்லையாம்.
  • ஐயய்யோ… அப்புறம்?
  • இந்த படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவை அணுகிய தயாரிப்பு தரப்பிடம் நயன்தாரா போட்ட ஒரே நிபந்தனை இதுதான். அஜீத்துடன் நடிக்க எனக்கு விருப்பம்தான். அதற்காக நீங்க கேட்கிற தேதியை அப்படியே மாதக்கணக்கில் என்னால கொடுக்க முடியாது. அவர் இந்த படத்திற்காக என்ன தேதி கொடுத்திருக்கிறார் என்று முதலில் சொல்லுங்க. அதுக்கேற்ற மாதிரி என் தேதிகளை ஒதுக்குகிறேன் என்றாராம்.
  • அலசி பிழிந்து கொண்டிருக்கிறார்கள். தேதிகள் திருப்தியானால் மட்டுமே அஜீத் படத்தில் இருப்பார் நயன்தாரா.

Tuesday 28 February 2012

பில்லா 2 படத்தில் நயன்தாரா

பில்லா படத்தில் அஜீத் ஜோடியாக நடித்தார் நயன்தாரா. இந்நிலையில் பில்லா 2 படத்தில் அஜீத் ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா கெஸ்ட் ரோலில் வந்து செல்லக்கூடும் என்று கூறப்படுகின்றது.
திரையுலகை விட்டு விலகியிருந்த நயன்தாரா பிரபுதேவாவைப் பிரிந்த பிறகு மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நயன் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பில்லா 2 படத்திலும் நயன் வரவிருக்கிறார். அப்படியென்றால் அடுத்தடுத்து 2 படங்களில் தல-நயன் ஜோடியைப் பார்க்கலாம்.
இப்படத்தை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்குகிறார். இதில் அஜீத்தும், தூக்குடு தெலுஙகு படம் மூலம் பிரபலமான மீனாக்ஷி தீக்ஷிதும் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ள குத்துப்பாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Friday 24 February 2012

எப்போது தியேட்டர்களைத் தாக்கும் பில்லா 2

அஜித்தின் அடுத்த அதிரடியான ‘பில்லா 2′ தமிழகம் தொடங்கி ஐரோப்பா வரையிலும் 93 நாட்கள் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. டைட்டில் பாடலுடன் ஒரு வார ‘பேட்ச் ஒர்க்’ மட்டுமே மீதமிருக்கும் நிலையில் ‘பில்லா 2′ பட பாடல் கேசட் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அற்புதமாக வந்துள்ளதாக படக்குழுவை சேர்ந்தவர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி எப்போது பில்லா 2 தியேட்டர்களைத் தாக்கும்..?” என்றால், “ஏப்ரல் 2012…” என்கிறார் தெளிவாக

Saturday 18 February 2012

பில்லா 2

பில்லா 2 படத்தில் அஜித் எந்த சண்டை காட்சிக்கும் டூப் போடாமல் நடித்துள்ளார். இதில் குறுப்பிடத்தக்க சண்டை காட்சி என்னவென்றால் ஹெலிகாப்ட்டர் சண்டை காட்சி தான்.

ஹெலிகாப்ட்டர் சண்டை காட்சி ஜார்ஜியாவில் படமாகபட்டுள்ளது இதில் அஜித் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் மற்றும் அஜித் ஒரு கடுமையான உழைப்பாளி என்று படத்தின் இயக்குனர் சக்ரி டோலேட்டி தெரிவித்தார்.

Saturday 11 February 2012

பில்லா 2

அஜித்தின் பில்லா 2 படம் விரைவில் ரிலீஸ் ஆகபோகிறது இது ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்னொருபுறம் யுவன் சங்கர் ராஜா பில்லா 2 விற்காக புது விதமான இசை அமைத்துள்ளார். பில்லா முதல் பாகத்தை விட பில்லா 2 வின் இசை ரசிகர்களை அமர்களபடுத்த போகிறது.
தற்போது யுவன் சங்கர் ராஜா பில்லா 2 பாடல்களை பற்றி கூறியதாவது , பில்லா 2 பாடல்கள் அனைத்தும் மிக நன்றாக வந்துள்ளது. இதில் ஒரு மெலடி பாடல் இடம் பெறுகிறது எனக்கு மிகவும் பிடித்த 7 G ரெயின்போ காலனி பாடலை விட இப்பாடல் மிகவும் பிடித்திருகிறது.

Friday 10 February 2012

பிரம்மாண்டத்தின் மறுபக்கமாக பில்லா 2 அமையும்

பில்லா 2 திரைப்படத்தை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.கொலிவுட்டில் தல அஜீத்குமார், பார்வதி ஒமணக்குட்டன் நடிக்கும் பில்லா 2 திரைப்படத்தை சக்ரி டோலட்டி இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வருகிற மார்ச் மாதம் இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். பில்லா 2 படத்தினை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருப்பதாகவும் ஒவ்வொரு காட்சிக்கும் பல கோடிகளை செலவு செய்து காட்சிப்படுத்தியிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். அஜீத் மற்றும் வில்லன்கள் மோதும் காட்சியை ஜார்ஜியாவில் உள்ள பனிமலையில் இயக்குனர் படமாக்கியுள்ளார். இது வரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு சண்டைக்காட்சியை பார்த்து இருக்க முடியாது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். அதுபோலவே ஆங்கில படங்களில் வரும் ஹெலிகொப்டர் சண்டைக்காட்சியை போன்று பில்லா 2 படத்திலும் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. அந்த சண்டைக்காட்சிக்கு பல கோடிகளை செலவு செய்து இருக்கிறார்கள். ஹெலிகொப்டர் சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் அஜீத்குமார் நடித்துக் கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பு அஜீத்குமார் நடித்து வெளிவந்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் பில்லா 2 வெளிவர இருக்கிறது. பில்லா 2 திரைப்படத்தை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.கொலிவுட்டில் தல அஜீத்குமார், பார்வதி ஒமணக்குட்டன் நடிக்கும் பில்லா 2 திரைப்படத்தை சக்ரி டோலட்டி இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வருகிற மார்ச் மாதம் இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். பில்லா 2 படத்தினை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருப்பதாகவும் ஒவ்வொரு காட்சிக்கும் பல கோடிகளை செலவு செய்து காட்சிப்படுத்தியிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். அஜீத் மற்றும் வில்லன்கள் மோதும் காட்சியை ஜார்ஜியாவில் உள்ள பனிமலையில் இயக்குனர் படமாக்கியுள்ளார். இது வரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு சண்டைக்காட்சியை பார்த்து இருக்க முடியாது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். அதுபோலவே ஆங்கில படங்களில் வரும் ஹெலிகொப்டர் சண்டைக்காட்சியை போன்று பில்லா 2 படத்திலும் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. அந்த சண்டைக்காட்சிக்கு பல கோடிகளை செலவு செய்து இருக்கிறார்கள். ஹெலிகொப்டர் சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் அஜீத்குமார் நடித்துக் கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பு அஜீத்குமார் நடித்து வெளிவந்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் பில்லா 2 வெளிவர இருக்கிறது.

Thursday 9 February 2012

தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு தெரியாத அரசியல் எதுக்குங்க

தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு தெரியாத அரசியலில் எதுக்கு இறங்கணும் என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத்.
ரஜினிக்கு அடுத்து, அடிக்கடி அரசியலுக்கு வரப் போகிறார் என கிசுகிசுக்கப்படுபவர்களில் ஒருவர் அஜீத். அதற்கேற்பத்தான் அவரது நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் இருந்து வந்தன.
அதே நேரம் க்யூவில் நின்று ஓட்டுப்போடுவதோடு தன் அரசியலை நிறுத்திக் கொள்வது அவர் வழக்கம்.
இந்தநிலையில் எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “ஏற்கெனவே தமிழ்நாட்டுல எக்கச்சக்க அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கி றேன். அரசியல்னா என்னன்னே தெரியாம, முழுசாப் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வெச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன்.
எனக்கு சினிமா தெரியும். அரசியல் தெரியாது. தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி, மக்களையும் குழப்ப மாட்டேன். சுருக்கமாச் சொல்லணும்னா, அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது!” என்று கூறியுள்ளார்.

Wednesday 8 February 2012

"Yes, I'm Selfish" : Ajith's Exclusive Interview


அஜித்க்கு வில்லியாக நடிக்க போகும் அமலா பால்

அஜீத்தின் அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் விஷ்ணுவர்தன்.  இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
படத்தில் அஜீத்தின் நாயகி யார், மற்றவர்கள் யாரெல்லாம்  நடிக்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
அஜீத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் நயன்தாரா. சம்பளமாக 1.5 கோடி ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறதாம்.  அஜீத் – நயன்தாரா – விஷ்ணுவர்தன் ஆகிய மூவரும் ஏற்கனவே ‘பில்லா’ படத்தில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறார்கள்.
அஜீத் – நயன்தாரா ஜோடி இல்லாமல் படத்தில் இன்னொரு ஜோடியும் இருக்கிறது. ‘ வேட்டை’ பட ஜோடியான ஆர்யா – அமலாபால் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்களாம்.
ஆர்யாவை ஒப்பந்தம் செய்துவிட்டு அவருக்கு ஜோடி யார் என்று விஷ்ணுவர்தன் ஆலோசித்து கொண்டிருந்தாராம். அவரிடம் அமலா எனக்கு ஜோடியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆர்யா கூறினாராம்.
ஆர்யா – விஷ்ணுவர்தன் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பதால் நண்பனின் வேண்டுகோளுக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறார் விஷ்ணுவர்தன்.
இப்படத்தில் அமலா பால் நெகடிவ் ரோலில் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகின்றன

Monday 6 February 2012

அஜித்துடன் நடிக்க நயன்தாரா கேட்கும் புதிய சம்பளம்

நயன்தாரா- பிரபுதேவா காதல் முறிந்துள்ளது. பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்க நயன்தாரா திட்டமிட்டார். கடைசி படமான ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’ படப்பிடிப்பு இறுதி நாளில் அனைவரையும் கும்பிட்டப்படி கண்ணீரோடு விடைபெற்றார்.
இந்துவாக மதம் மாறவும் செய்தார். ஆனால் பிரபுதேவாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டு திருமணத்துக்கு தயங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருடனான காதலை உதறிவிட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தெலுங்கு படமொன்றில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழில் அஜீத்துடன் நடிக்க உள்ளார். ஏற்கனவே அஜீத்துடன் பில்லா, ஏகன் படங்களில் நடித்துள்ளார். இப்போது மீண்டும் அவருடன் ஜோடி சேர்கிறார். இந்த படத்தில் ஆர்யாவும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். இவரும் நயன்தாராவுடன் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்துள்ளார். அப்படம் ஹிட்டானது. இவர்கள் மூவரும் இணைந்து நடிக்க உள்ள படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார்.
நயன்தாராவிடம் கதை சொன்னபோது அவருக்கு பிடித்து போனதாம். உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு ரூ.1 1/2 கோடி சம்பளம் பேசியுள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

Saturday 4 February 2012

அஜீத் ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா


பில்லா, ஏகன் படங்களுக்குப் பிறகு அஜீத் ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா.

பிரபு தேவாவை விட்டு நயன்தாரா பிரிந்துவிட்ட செய்தி பரவியதிலிருந்து, நயன்தாராவைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன.

இத்தனை நாளும் பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகளைக் கூட பிரபு தேவாவுக்காக உதறிவந்த நயன்தாரா, இப்போது வாய்ப்புகளை மறுக்காமல் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.

தெலுங்கில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள அவருக்கு ரூ 1.40 சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்து தமிழில் அஜீத் ஜோடியாக நடிக்கவும் கிட்டத்தட்ட இதே சம்பளத்தில் பேசியுள்ளார்களாம் நயன்தாராவிடம். அனுஷ்காவைத்தான் முதலில் ஜோடியாக தேர்வு செய்தனர். ஆனால் தெலுங்கு படங்களில் அவர் பிசியாக இருப்பதால் வேறு நாயகி தேடினர். அஜீத்துடன் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

இதுகுறித்து இயக்குனர் விஷ்ணுவர்த்தனிடம் கேட்டபோது, அஜீத் ஜோடியாக நயன்தாராவிடம் பேசியிருப்பது உண்மைதான். ஆனாலும் அவரிடம் இன்னும் ஒப்பந்தம் எதுவும் போடவில்லை, என்றார். அஜீத்தும் நயன்தாராவும் ஏற்கனவே பில்லா, ஏகன் படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.

Friday 3 February 2012

அஜித்துக்கும்-விஜய்க்கும் எதிரியான பிரபல நடிகர்


  • அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘பில்லா – 2′, விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘துப்பாக்கி’ இவ்விரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் வித்யூத் ஜாம்வால்.

  • ஒரே சமயத்தில் தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் நாயகர்களுடன் நடித்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார் வித்யூத். இது குறித்து வித்யூத் கூறியிருப்பது :

  • ” ஒரே சமயத்தில் விஜய் மற்றும் அஜீத் இருவருடனும் நடித்து வருவது சந்தோஷமாக இருக்கிறது. 

  • ‘பில்லா 2′ படத்திற்காக ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கினோம். ஆங்கில சினிமாவில் தான் அதுமாதிரியான சண்டைக் காட்சிகளைப் பார்க்க முடியும். இந்திய சினிமாவில் முதன் முறையாக அதுபோல் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கி இருக்கிறோம். இந்த சண்டைக்காட்சியில் நான் நடித்ததில் பெருமைப்படுகிறேன்.

  • அஜீத் மிகவும் எளிமையான மனிதர். பல விஷயங்கள் குறித்தும் தெளிவான பார்வை உடையவர். விஜய்யுடன் நடிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு ரசிகர்கள் இருந்தும் இன்னும் தன் தொழிலில் மிகச் சிரத்தையுடன் இருக்கிறார்.



Friday 27 January 2012

பில்லா 2


  • ’பில்லா 2′ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தல அஜித் நடிக்கும் 51-வது படம் ‘பில்லா 2′. பார்வதி ஓமனக்குட்டன் நாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தை சக்ரி டோலொட்டி இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில் ‘பில்லா 2′ படத்தின் கலக்கலான போஸ்டர்கள் பொங்கல் தினத்தில் வெளியிடப்பட்டுள்ளதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
  • “கையில் துப்பாக்கியுடன் கோபப்பார்வையோடு ‘ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இறந்த காலம் உண்டு. ஒவ்வொன்றும் வரலாறு’ என்பதை குறிக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
  • இந்த படத்தில் அஜித் நடிப்பை பற்றி கூறிய இயக்குநர், ‘டேவிட் என்ற சாதாரண மனிதன் தூத்துக்குடியில் இருந்து வந்து டான் பில்லாவாக எப்படி உருவாகிறார் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார் அஜித் என்றார். ‘பில்லா 2′ படத்தில் மும்முரமாக நடித்து வந்ததால் அஜித் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. ‘பில்லா 2′ படத்தில் அஜித்தின் பணிகள் முடிந்த பின் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்றிருந்தார். தற்போது சிங்கப்பூரில் இருந்து திரும்பி இருக்கும் அஜித், அடுத்ததாக விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday 26 January 2012

Thala pola varuma

தமக்கிருக்கும் பிரபல்யத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யத்துணிபவர்களுக்கு மத்தியில், தன் பிரபல்யத்தையே ஒதுக்கி வைத்து விட்டு தானும் ஓர் சராசரி குடிமகன் தான் என்று வாழ்ந்து வருபவர்.

கீழே உள்ள படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரியும். வாக்களிக்க செல்லும்போதுகூட மக்களோடு மக்களாக நின்று வாக்களித்துவிட்டு வருபவர்.

Wednesday 25 January 2012

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘பில்லா 2′.

இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ‘பில்லா 2′. அல்டிமேட் ஸ்டார் ‘தல’ அஜித் நடிப்பில் ‘பில்லா’ வசூலில் பட்டையைக் கிளப்பியதோடு… தல அஜித்துக்கு ஒரு பிரேக்கை ஏற்படுத்தி தந்தது. இப்போது படுவேகத்தில் ‘பில்லா 2′ ஷூட்டிங் நடந்து வருகிறது. இதற்காக நம்ம தல அஜித் பல கிலோ எடைகளை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியிருக்கிறார். அதுமட்டுமின்றி படத்தின் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என இயக்குநர் சக்ரி தெரிவித்துள்ளார். படம் ரிலீஸ் ஆகும் போது, தல ரசிகர்கள் உட்பட சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி தான் போல…பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாக மாறிக் கொண்டிருக்கிறார் அஜித். போகிற வேகத்தைப் பார்த்தால் இவரது படங்களின் பட்ஜெட்டை படம் வெளிவரும் முன்பே தயாரிப்பாளர்கள் வசூலித்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. ‘பில்லா 2′ படத்தின் போஸ்டரைதான் வெளியிட்டிருக்கிறார்கள். அதற்குள் படத்தின் வெளிநாட்டு உரிமை விலை போயிருக்கிறது. அதுவும் எப்படிப்பட்ட விலை? மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள். அதிகமில்லை ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள்

Tuesday 24 January 2012

ஆஸ்கார் விருதுக்கு குறிவைத்த அஜித்


ஆஸ்கார் அவார்டைக் குறிவைத்து தயாரிக்கப்படும் படத்தில், கமல் நடிக்கிறார். அதே படத்தில் ‘தல’யை நடிக்கவைக்கும் முயற்சி ந்டந்துகொண்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல், மோகன்லால் மற்றும் ரவிதேஜாவும் நடிக்கிறார்கள். தலைவனும் தலயும் இணையப்போகும் இந்தப்படம் நிச்சயம் பெருத்த வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday 22 January 2012

பில்லா 2 படத்தை கட்டுபடுத்திக்கொண்டு காத்திருக்க முடியாது


  • கடந்த 2011 ஆம் ஆண்டின் நம்பர் ஒன் வெற்றி படமாக அமைந்த “மங்காத்தா” வை தொடர்ந்து வெளி வர இருக்கும் தலயின் 51 வது படமான பில்லா 2 பெரும் எதிர்பார்ப்பில் இருப்பதோடு,சுமார் 5 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு உரிமையை பெற்று இருக்கிறது G.K Media என்கிற அமெரிக்க நிறுவனம்.
  • கமலின் முழு கட்டுப்பாட்டில் இருந்த ‘உன்னை போல் ஒருவன்’ படத்தை இயக்கினாலும், என்னை பொறுத்தவரை சக்ரி டோலேடி அவர்களுக்கு முழு சுதந்திரத்துடன் பணியாற்றிவரும் “பில்லா 2 ” தான் முதல் படம்.
  • “II” மட்டுமே தோன்றும் ஒரு லோகோவை முதல் விளம்பர போஸ்டராக போட்டு, அனைவருக்கும் ‘பில்லா 2′ என கொண்டு சென்றது சக்ரிக்கு ஒரு விசிடிங் கார்டு என்று சொல்லலாம்.
  • முதல் பாகத்தில் மிகவும் பிரபலமான தீம் இசையை பயன்படுத்தாமல், பில்லாவின் இரண்டாம் பாகத்திற்கு தனிப்பட்ட தீம் இசையை உருவாக்கி வருவதாக கூறி இருக்கிறார் அஜித்தின் லக்கி இசை அமைப்பாளர் யுவன். அடுத்த அஜித்தின் இரண்டு படங்களுக்கும் இவரே இசை அமைப்பாளர் என்றும் தெரிகிறது.
  • படத்தின் ஒரு ப்ரோமோ பாடலை இணையத்தில் வெளியிட்டு மற்ற நடிகர்கள் விளம்பரத்திற்கு படாத பாடு பட்டு வரும் இன்றைய டிரெண்டில், மூன்றே மூன்று போஸ்டர்களில் பெரும் எதிர்ப்பார்ப்பை படத்திற்கு கொண்டு வர இயலும் என்றால், அது தலைவர் ரஜினிக்கு பின் தலயால் மட்டுமே சாத்தியம். பில்லா 2 படத்தின் ஸ்டில்கள்.
  • “பில்லா 2 ஸ்டில்களை பார்த்த பின் படம் வெளிவரும் வரை கட்டுபடுத்திக்கொண்டு காத்திருக்க முடியாது என்று தோன்றுகிறது” என்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Friday 20 January 2012

வித்தியாசமான அஜித்தை பார்க்க போறிங்க விஷ்ணுவர்தன் பேட்டி!


விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அஜித் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கப்போகிறாராம். இந்த தகவலை டைரக்டர் விஷ்ணுவர்தனே தெரிவித்துள்ளார். பில்லா-2 படத்திற்கு பின்னர் அஜித், விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
ஏற்கனவே பில்லா படத்தின் முதல் பாகம் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சிலபல காரணங்களால் பில்லா 2 படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவில்லை. இந்நிலையில் அஜீத் – விஷ்ணுவர்த்தன் ஜோடி மீண்டும் இணைகிறது.
புதிய படம் குறித்து விஷ்ணுவர்தன் அளித்துள்ள பேட்டியில், அஜித் சாரிடம் சொன்ன ஒரு வரி கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்த பின்னர்தான் அந்தந்த பாத்திரத்திற்கு யார் பொருந்துவார் என்று தீர்மானிக்கப்படும். அதன் பிறகே அடுத்த கட்ட பணிகள் தொடங்கும். அதற்குள் பல்வேறு விதமாக செய்திகள் உலா வருகின்றன. எதிலும் உண்மையில்லை.
திரைக்கதை அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் இருக்கிறது. அது முடிந்தால்தான் மற்றவைகளில் கவனம் செலுத்துவோம், என்று கூறியுள்ளார். மேலும், இந்த புதிய படத்தில் அஜித் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறியிருக்கிறார்.

அஜீத்திற்காக..! போர்க்களம் ' பண்டி சரோஜ்குமார்


  • அஜீத்திற்கு அவரது ரசிகர்களைத் தாண்டி, திரையுலகிலும் பல நண்பர்களும் அவரது ரசிகர்களாக இருக்கின்றனர். தமிழ்த் திரையுலகினர் மத்தியில் 'ஜென்டில்மேன்' என்று சொல்லப்படும் அஜீத்திற்கு ஒரு இயக்குனரும் ரசிகராக இருக்கிறார். 

  • ' போர்களம் ' படத்தின் இயக்குனர் பண்டி சரோஜ் குமார்.  

  • அவர் அஜீத்தைப் பற்றி தனது ஃபேஸ்புக் இணையத்தில்  " யாராவது விஜய்யை விமர்சனம் செய்தால் நான் அதை ஒப்புக் கொள்ள மாட்டேன். ஆனால், யாராவது அஜீத்தைப் பற்றி விமர்சனம் செய்தால், அவர்களை எதிர்ப்பேன்.. பதிலடி கொடுப்பேன். அஜீத்திற்காக எந்த எல்லை வரையும் செல்வேன். அஜீத் நேர்மையானவர், எளிமையானவர், துணிவானவர், பொறுப்பானவர். தன்னம்பிக்கையாலும் கடின உழைப்பாலும் முன்னுக்கு வந்தவர்.

  • தமிழ் ரசிகர்கள் உள்ளங்களில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் அஜீத். நடிக்க வரும் எல்லா புதுமுகங்களுக்கும் அவர் முன்மாதிரியாக இருக்கிறார். அவர் பெரிய நடிகர் இல்லை, நன்றாக நடனம் ஆடத் தெரிந்தவர் இல்லை, அவரது சில படங்கள் மட்டுமே பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளன. ஆனாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பிறகு அஜீத் தான் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். நீங்கள் திரைத்துறையில் இருந்தால் மட்டுமே அவரது  பெருமைகளை உணர முடியும். நான் அவர் அருகில் இருந்து அவரை ரசித்தவன். " என்று கூறியுள்ளார்

Thursday 19 January 2012

டைம்ஸ் ஒப் இந்தியாவில் தல அஜித்




டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிக்கை வெளியிட்ட இந்தியாவின் சிறந்த பத்து ஆண்கள் வரிசையில் இடம்பிடித்தது , திரையுலகில் அம்பது படங்களை தாண்டியது என்று இன்னும் நிறைய சாதனைகள் அவர் சென்ற ஆண்டு நிகழ்தினார்.
சென்ற வருடம் கூகிள் தேடல்களில் படங்கள் பிரிவில் இந்திய அளவில் 7 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது மங்காத்தா. அந்த பிரிவில் தமிழில் இருந்து இடம் பிடித்த ஒரே படம் அது மட்டுமே. சென்ற வருடம் ரஜினி , கமல் படங்கள் மட்டுமே வெளிவரவில்லை , அதை தவிர்த்து அத்துணை நடிகர்களின் படங்களும் வெளிவந்திருந்தது. ஆனால் அவர்களின் படங்கள் எல்லாம் இணையதள தேடலில் இடம்பிடிக்க முடியவில்லை

Wednesday 18 January 2012

பில்லா 2 போஸ்டர் மிக பெரிய ஹிட்

பொங்கலுக்கு பில்லா 2 படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். போஸ்டருக்கே பில்டப்பா என்று சொன்னவர்களே ஆச்ச‌ரியப்படும்படி இந்த‌ப் போஸ்டர்களே பிரமாதமாக ஹிட்டாகியிருக்கிறது.
பில்லா இரண்டாம் பாகத்தில் டேவிட் என்ற சாதரண தமி‌‌ழ் இளைஞன் எப்படி பில்லா என்கிற டானாக மாறினான் என்பதை காட்டியிருக்கிறார்கள். உன்னைப்போல் ஒருவன் சக்‌ரி டொலோட்டி இயக்கியிருக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா இசை.
இந்தப் படத்தின் போஸ்டர்களை ஏற்கனவே அறிவித்தபடி பொங்கலுக்கு வெளியிட்டனர். மங்காத்தாவுக்கு மாறாக இளமையுடன் இருந்த ஆக்ரோஷ அ‌ஜீ‌த்தின் புகைப்படங்கள் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளன. மங்காத்தாவைவிட பில்லா 2 ஓபனிங் அதிகமாக இருக்கும் என்று இப்போதே திருப்தியில் இருக்கிறது தயா‌ரிப்பாளர் தரப்பு

Saturday 14 January 2012

அஜித்தும் கமலும் இணைந்து நடிக்கும் படம்

கூட்டல் கழித்தல் மாதிரிதான் கோடம்பாக்கத்தில் நடைபெறும் முட்டல் மோதல்களும்! தசாவதாரம் படம் வெளியான நேரத்தில் உச்சக்கட்ட ‘மிர்ச்சி’யாக இருந்தார்கள் அப்படத்தின் ஹீரோவான கமலும், தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனும். படத்தின் ரிலீஸ் தேதியை கூட பேப்பர் விளம்பரத்தை பார்த்தே அறிந்து கொள்ள முடிந்தது கமலால். அப்படியெல்லாம் தள்ளி நின்ற இருவரும் இப்போது மீண்டும் கை கோர்த்திருக்கிறார்கள்.
இந்த கூட்டணி கூண்டுக்குள் அடைக்கலமாகியிருப்பது கமல் மட்டுமல்ல, ஒரு காலத்தில் ஆஸ்கர் பிலிம்சில் அடுத்தடுத்த படங்களில் நடித்த அஜீத்தும்தான். அந்த நேரத்தில் அஜீத்துக்கும் ஆஸ்கருக்கும் கூட மயிரிழை அளவுக்கு மனக்கசப்பு இருந்தது.
ஒரு சின்ன புன்னகை எல்லாவற்றையும் வென்று விடுமல்லவா? இப்போது மீண்டும் அந்த அதிசயம் நிகழப்போவதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
கமல் நடிக்கவிருக்கும் இந்த புதிய படத்தில் ஒரு முக்கியமான ரோலில் அஜீத்தையும் நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இவரும் ஆகட்டும் பார்க்கலாம்… என்று கூறியிருக்கிறாராம்

Monday 9 January 2012

‘தல’ அஜித் பெண்களை மதிப்பதில் சிறந்தவர்-நயன்தாரா சிறப்பு பேட்டி வீடியோ


தோள் கொடுத்த அஜித்

அஜித் அவர்கள் ஒரு பத்திரிக்கை நிரூபர் மரணத்திற்கு அவர் வீட்டுக்கு சென்றிருந்தார் . பத்திரிக்கை நிரூபரின் வீட்டு வாசல் மிகவும் குறுகலாக இருந்ததால் நிரூபரை தூக்க யாரும் முன்வரவில்லை முதல் ஆளாக தோல் கொடுத்தது நம் தல அஜித் அவர்கள் தான்.
அஜித் அவர்களின் இந்த மனித நேயத்தை பாராட்டுவதற்கு நமக்கு வார்த்தைகள் இல்லை . அஜித் அவர்களின் இந்த செயலை அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் தெரிய படுத்துவோம்.

Sunday 8 January 2012

அஜித்தைப் பற்றி புகழ்ந்து தள்ளும் விஜய் ப





அஜித் பற்றிய தனது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்திருக்கிறார் விஜய். “அஜித்தின் தன்னம்பிக்கை எனக்கு ரொம்பவே பிடிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக்காம ஈஸியா செஞ்சு முடிச்சிருவாரு அஜித். என் படத்தில் ஒரு பஞ்ச் டயலாக் வரும். ‘நான் ஒரு தடவை முடிவெடுத்திட்டா அப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேன்’னு… இந்த பஞ்ச் டயலாக் எனக்குப் பொருந்துதோ இல்லையோ அஜித்துக்கு நன்றாகவே பொருந்தும்” என்கிறார் விஜய்.

Thursday 5 January 2012

அஜித் ரசிகர்களுக்கு புதிய பரபரப்பு தகவல்


  • அஜித் நடித்த படங்களிலே அதிக வசூல் சாதனை படைத்த படம் மங்காத்தா. இப்போதுள்ள தமிழ் சினிமாவில் இதுவரையில் முதல் போட்டு முதல் கூட எடுகமுடிவதில்லை ஆனால் மங்காத்தா 40 கோடி செலவில் எடுத்தார்கள் அதன் வருமானம் மூன்று மடங்கு 130 கோடி ஆகும். இதுவரயில் அஜித்தின் எந்த படமும் மங்காத்தா அளவிற்கு வசூல் சாதனை படைக்க வில்லை இந்த சாதனையை முறியடிக்க அஜித்தின் வரபோகும் படங்களால் மட்டும் தான் முறியடிக்க முடியும் என்று அஜித்தின் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Tuesday 3 January 2012

அஜீத்துடன் நடிக்க அனுஷ்கா மறுப்பு ?


  • அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா கால்ஷீட் கிடைக்காததால் வேறு ஹீரோயினை தேடுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். ‘பில்லா 2’ படத்தில் அஜீத் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஆனால் வேறு படங்களில் அவர் பிஸியாக இருப்பதால் அஜீத் படத்துக்கு கால்ஷீட் தர இயலவில்லை. இதையடுத்து பிரபல நடிகைகளிடம் கால்ஷீட் பற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர்.
  • ‘பில்லா’ முதல்பாகத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். ‘பில்லா 2’ படத்தையும் அவரே இயக்குவதாக இருந்தது. ஆனால் தெலுங்கு படத்தை இயக்க சென்றுவிட்டதால் அந்த வாய்ப்பு கைநழுவியது. தற்போது சக்ரி டுலிட்டி இப்படத்தை இயக்கி வருகிறார். அஜீத், விஷ்ணுவர்தன் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் 2 மாதங்களுக்கு பிறகு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ‘சிறுத்தை’ ஷிவா இயக்கும் மற்றொரு படத்திலும் அஜீத் நடிக்கிறார்.

அஜித்தின் உயர்ந்த உள்ளத்திற்கு மற்றொரு எடுத்துகாட்டு புதிய தகவல்



அஜித் நடிக்கும் பில்லா 2 வில் கதாநாயகியாக அறிமுகம் ஆகும் பார்வதி ஓமனகுட்டனுக்கு நடிக்க வரவில்லை என்று பில்லா 2 வில் இருந்து தூக்கி விடலாம் என்று பட குழுவினர் எல்லோரும் எண்ணினார்கள் அப்போது நம்முடைய தல அஜித் தான் முதல் படம் தானே நாம் தான் கற்று கொடுக்கவேண்டும் என்று கூறினார். சொன்னது மட்டும் அல்லாமல் நடிப்பதற்கு கற்றும் தந்தார் . அஜித்தின் தீவிர ரசிகர்களாகிய நாம் அவருடைய பெருமைகளை மற்றவர்களுக்கு தெரிய படுத்துவோம் . அணைத்து அஜித் ரசிகர்களுக்கும் இந்த செய்தியை அனுப்புங்கள் .